மார்த்தாண்டம், மே 13 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 வழி சாலை பணிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது திருவனந்தபுரம் செல்லும் பெரும்பாலான கார், லாரிகள் களியக்காவிளையிலிருந்து இந்த நான்கு வழிச்சாலை வழியாக செல்வது வழக்கம். இதனால் போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் எளிதில் செல்ல வாய்ப்பு ஏற்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. சுங்கன்கடை பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு பணி வேகமாக நடக்கிறது. பள்ளியாடி பகுதியில் ரோடு துண்டிக்கப்பட்டு அந்தப் பகுதியில் பாலம் கட்டும் பணி நிறைவடைந்து விட்டது. இதே போல் காப்புகாட்டிற்க்கும் – ஐரேனிபுரத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் நான்கு வழிச்சாலை செல்கிறது.
இந்தப் பகுதியில் போக்குவரத்து சாலை தற்பொழுது துண்டிக்கப்பட்டு பணி வேகமாக நடந்து வருகிறது. இதனால் இந்தப் பகுதியில் செல்லும் வாகனங்கள் தற்காலிகமாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த பணிகள் 3 மாதத்தில் இந்தப் பகுதியில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



