சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் விஜய், பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தினார். இது பெண்களுக்கு வழங்கப்படும் சலுகை அல்ல; அவர்கள் அரசியல் மற்றும் சமூக பங்கேற்பைப் உறுதி செய்யும் அடிப்படை ஜனநாயக உரிமை என அவர் தெரிவித்தார்.
“ஒரு பெண் அதிகாரம் பெறும்போது ஒரு குடும்பம் உயர்கிறது; ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாரம் பெறும்போது ஒரு நாடே உயர்கிறது” என்று முதல்வர் விஜய் கூறினார். பெண்களின் அதிகாரமயமாக்கலே நாட்டின் முன்னேற்றத்திற்கான வலுவான அடித்தளம் என்றும் அவர் வலியுறுத்தினார்.



