சுசீந்திரம், ஆக. 3 –
நல்ல மழை வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டிய மன்னர் ஆட்சி காலத்தில் இருந்தே தாணுமாலய சுவாமி கோவிலில் நிறை புத்தரிசி விழா நடைபெற வழக்கம். அதுபோல இந்த ஆண்டு நிறை புத்தரிசி விழாவிற்காக இன்று அதிகாலை வயல்களில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து மேளதாளங்கள் முழங்க தாணுமாலயா சுவாமி கோவில் அருகே உள்ள விநாயகர் கோவிலிற்கு முன்பு வைத்து பூஜைகள் செய்து பின்பு நெற்கதிர்களை தாணுமாலய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு படைத்து நிறைப்பு த்தரிசி விழா நடைபெற்றது. பின்பு வருகை புரிந்த பக்தர்களுக்கு நெற்கதிர்களை பிரசாதமாக வழங்கினர்.



