கிருஷ்ணகிரி, செப்.14:
கிருஷ்ணகிரி மாவட்டம் போகனப்பள்ளியில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அருள்மிகு ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மற்றும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் மு.தம்பிதுரை கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வெ.இராமுவேல், செயல் அலுவலர்கள் சித்ரா, நடராஜன், சிவா, கண்ணன், பரம்பரை அறங்காவலர் எல்.கிருஷ்ணசந்த், ஆய்வாளர் சா.ராஜா, திருக்கோயில் அர்ச்சகர் எம்.ரவி குருக்கள் உள்ளிட்ட துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



