புதுக்கடை, ஜன. 24 –
புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியை சேர்ந்தவர் ரெஜிகுமார் (49). இவர் நேற்று இரவு 7.30 மணி அளவில் தனது காரில் தேங்காப்பட்டணத்திலிருந்து கருங்கல் செல்லும் சாலையில் கருங்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
வில்லாரிவிளை என்ற பகுதியில் கார் செல்லும் போது, தேங்காப்பட்டணம் நோக்கி எதிரே மாருதி கார் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. திடீரென மாருதி கார் ரெஜிகுமார் ஓட்டி வந்த கார் மீது மோதியது. இதில் காரின் முன் பகுதி சேதம் ஏற்பட்டது.
இதற்கிடையில் ரெஜிகுமாரின் காருக்கு பின்னால் ஒரு குட்டி யானை வாகனம் வந்து கொண்டிருந்தது. அந்த வாகனமும் காரில் மோதி, குட்டியான வாகனத்தில் சேதம் ஏற்பட்டது. இதில் மாருதி வாகனத்தில் வந்த நபருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து ரெஜிகுமார் புதுக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


