தருமபுரி, ஜூலை 06 –
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் ஏ. ஜெட்டிஅள்ளி பஞ்சாயத்து எர்ரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர் M. சிவன் முன்னிலையில் ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி செயலாளர் தினேஷ் சபரி பிரசாத் ஏற்பாட்டில் இணைத்துக் கொண்டனர்.
இதில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக இணை செயலாளர் வீரமணி, மாவட்ட வாக்குச்சாவடி அணி இணை அமைப்பாளர் தங்கராஜ், தகவல் தொழில்நுட்ப அணி தினேஷ் ராஜா மற்றும் நல்லம்பள்ளி வடக்கு ஒன்றிய செயலாளர் சென்னப்பன், ஒன்றிய நிர்வாகிகள் லோகேஷ், நவீன், அன்பரசன், திருமால் ,பெருமாள், ராஜேஷ் குமார், ஹரிஹரன், கார்த்திகேயன், கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



