மதுரை ஜூன் 01
இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதுரை வந்த
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை விமான நிலையத்தில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
அளித்தனர்.
அதன்
பின்னர் கார் மூலமாக மதுரை பெருங்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் சென்றார். அதன் பின்னர்
மாலை தனியார் ஹோட்டலில் இருந்து கார் மூலமாக மதுரை முக்கிய வீதிகளில் சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் ரோட் ஷோ (சாலையில் மக்கள் சந்திப்பு)
மதுரை பெருங்குடி அம்பேத்கர் சிலை, அவனியாபுரம் மருதுபாண்டியர் சிலை, பெரியார் சிலை, ஜெய விலாஸ் சந்திப்பு,
ஜெய்ஹிந்திபுரம். பழங்காநத்தம் பைபாஸ்ரோடு , காளவாசல் ஆரப்பாளையம்
ஜெயில் ரோடு வழியாக சென்று மதுரை முன்னால் மேயர் முத்துவின் வெங்கல சிலையை திறந்து வைத்தார்.
வழிநெடுகிலும் முதல்வருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை முன்னிட்டு
மதுரை விமான நிலையம் முதல் முக்கிய வீதியில் வழியாக ஆரப்பாளையம் மேயர் முத்து சிலை வரை மதுரை முழுவதும் பாதுகாப்பு பணியில் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.