திருப்பூர், அக். 2:
திருப்பூர் மாவட்டத்தில் தாட்கோ முலம் கடந்த 3 ஆண்டுகளில் 723 பயனாளிகளுக்கு ரூ.19.9 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என தாட்கோ தலைவர் மதிவாணன் கூறினார்.
திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் சிட்கோ பின்னலாடை தொழில்பேட்டையினை தாட்கோ தலைவர் மதிவாணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இதற்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார்.
இதில் தாட்கோ தலைவர் மதிவாணன் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று தாட்கோ சார்பில் பயன்பெற்று வரும் பயனாளிகளை நேரடியாக சந்தித்து கள ஆய்வினை மேற்கொண்டு வருகிறோம். கடந்த 3 ஆண்டு காலத்தில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியானது அது ஒரே ஒரு குறிப்பிட்ட துறை வளர்ச்சியாக மட்டும் இல்லாமல் பல்வேறுதுறை வளர்ச்சியாக உள்ளது.
தமிழ்நாட்டில் கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் அனைத்து பலன்களும் சென்றடையும் வகையில் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து வாழ்வாதாரம் ஏற்படுத்திட தாட்கோ வழியே கடந்த 2021-2022. 2022-2023 மற்றும் 2023-2024 ஆகிய நிதியாண்டுகளில் பல்வேறு கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2021-2022, 2022-2023 மற்றும் 2023-2024 ஆகிய நிதியாண்டுகளில் இலவம்பஞ்சு தொழில், போட்டோ ஸ்டுடியோ மொபைல் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் நிலையம் கற்பூரம் தயாரித்தல், வாகன கடன். எலக்ட்ரிக் கடை, தையல் தொழில், உணவகம், மளிகை கடை ரிப் கட்டிங், செருப்பு தொழில், தளவாடங்கள் கடை, ஆபரண அணிகலன் கடை, கோழி வளர்ப்பு, பிளாஸ்டிக் தயாரிப்பு, லேத் கடை சிஎன்சி லேத், பவர்டில்லர்.
கோன் ரீவைண்டிங், பிவிசி எலக்ட்ரிக் பெண்ட் தொழில், ரத்த பரிசோதனை நிலையம், கார்மெண்ட்ஸ், நில மேம்பாட்டுத்திட்டம், பனியன் தொழில். பாத்திரக்கடை ஸ்டிக்கர் கடை. இரசாயனக் கடை அரிசி வியாபாரம் போன்ற பல்வேறு தொழில் புரிய கடனுதவி பெற்று வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள்.
2021-2022 ஆண்டில் 187 பயனாளிகளுக்கு ரூ.4.14 கோடி மதிப்பீட்டிலும்இ
2022-2023 ஆண்டில் 68 பயனாளிகளுக்கு ரூ.3.85 கோடி மதிப்பீட்டிலும். 2023-2024 ஆண்டில் 468 பயனாளிகளுக்கு ரூ.11.10 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 723 பயனாளிகளுக்கு ரூ.19.09 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் முதலிபாளையத்தில் தாட்கோ வழியே கட்டப்பட்டுள்ள 88 தாட்கோ பின்னலாடை தொழில்பேட்டையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் சிதிலமடைந்துள்ள பின்னலாடை தொழில்பேட்டையினை மறுசீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் தாட்கோ மாவட்ட மேலாளர் ரஞ்சித்குமார் மற்றும்
செயற்பொறியாளர் சரஸ்வதி மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
———–
புட்நோட்
——
முதலிபாளையம் சிட்கோ தொழிற்பேட்டையில் தாட்கோ தலைவர் மதிவாணன் ஆய்வு செய்தார். அருகில் கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் பலர் உள்ளனர்.