சங்கரன்கோவில், அக். 30 –
தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவரும், நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையை அனுப்பியவருமான பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது பிறந்தநாள் மற்றும் 63 ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு முத்துராமலிங்க தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட அவை தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் செண்பக விநாயகம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, அன்பரசு, கடற்கரை, கிறிஸ்டோபர், குணசேகரன், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், மின்வாரிய தொமுச திட்ட செயலாளர் மகாராஜன், மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், தொண்டரணி அமைப்பாளர் அப்பாஸ், வார்டு செயலாளர்கள் வாழைக்காய் துரைபாண்டியன், ஆறுமுகம், இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜராஜன், தொண்டரணி துணை அமைப்பாளர் ராஜவேல் ரத்தினம், மாணவரணி துணை அமைப்பாளர் வீமராஜ், ஐ டி விங்க் துணை அமைப்பாளர் சிவசங்கரநாராயணன், ஓய்வு பெற்ற தாசில்தார் சூரியநாராயணமூர்த்தி, முன்னாள் வர்த்தக அணி பத்மநாபன், நகராட்சி கவுன்சிலர் ராஜா ஆறுமுகம், மாணவரணி வெங்கடேஷ், வர்த்தகர் அணி ரகுமான் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



