கோவை, செப். 23 –
பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பட்டாம்பூச்சி சமூக நல அமைப்பு சார்பில் பசியில்லா ஞாயிறு சேவை திட்டத்தில் நோயாளிகள் மற்றும் அவர்களோடு தங்கியிருக்கும் உறவினர்களுக்கும், ஆதரவற்றோர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 4 வாரங்களாக உணவு வழங்கி வரும் தொடர்ச்சியாக கடந்த 21-9-2025 நடைபெற்ற நிகழ்வில் பட்டாம்பூச்சி ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் முன்னிலை வகித்தார். திருப்பூரைச் சேர்ந்த இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவன தலைவர் இந்திராசுந்தரம் கலந்து கொண்டு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள், ஆதரவற்றோர்கள் சுமார் 300 நபர்களுக்கு மதிய உணவு, இனிப்பு, ஆப்பிள், தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் மண்ணூர் ராமர், பாக்கியலட்சுமி, டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் பாலகிருஷ்ணன், நேதாஜி பேரவை வெள்ளை நடராஜ், கவுன்சிலர் எம்.கே. சாந்தலிங்கம், நல் விடியல் அறக்கட்டளை தலைவர் முத்து பாய், முதலுதவி சமூக நல அறக்கட்டளை தலைவர் முனைவர் அபு. இக்பால், பட்டாம்பூச்சி வானொலி சி.இ.ஓ முனைவர் கிருஷ்ணவேணி, தன்னார்வல தொண்டு நிறுவனர் கலைவாணி, வி.எஸ்.ஆர்.கே. மோகன், கவிஞர் ரஹ்மத்துல்லா மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பைச் சேர்ந்த கே. பிரதீப் குமார், தீபா முருகானந்தம், மு. யஸ்வந்த், பிரேமா, பத்துலா, ஹரி விபின் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.



