தருமபுரி, அக்டோபர் 01 –
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் வே. முத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மகளிர் உரிமைத்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, பட்டா சிட்டா பெயர் மாற்றம் ஆகிய வேண்டி பொதுமக்கள் துறை சார்ந்த அலுவலர்களிடம் விண்ணப்பங்களை அளித்தார்கள். மருத்துவ முகாமில் பிபி, சர்க்கரை நோய் மற்றும் இதர நோய்களுக்கான பரிசோதனைகளை பொதுமக்கள் செய்து கொண்டனர். இந்த முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து தீர்வு காணப்பட்ட மனுதாரர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த முகாமில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



