கிருஷ்ணகிரி, மே 26 –
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் நடைபெற்ற ஆற்காட் தொண்டு நிறுவனம் சார்பில் உயர் கல்விக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இம்மண்ணின் மைந்தரும், சமூக சேவகர், கல்வியாளர், நெல்லை நாடார் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப கல்லூரி துணை முதல்வர் மு.திருப்பதி கலந்து கொண்டு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? கல்வி உதவி தொகையுடன் எப்படி படிப்பது? கல்வி உதவித்தொகைகளை எப்படி பெறுவது? யார் யாருக்கெல்லாம் கல்வி உதவித்தொகைகள் கிடைக்கும்? எந்தெந்த படிப்புகளுக்கு வேலை வாய்ப்புகள் எப்படி உள்ளது என மாணவர்களிடையே விரிவாக எடுத்துரைத்தார்? உயர்கல்வி படிப்பது குறித்து மாணவர்கள், பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு விரிவாக பதில் அளித்தார். இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆற்காட் நிறுவனர். கேசவராஜ் அவர்களும் முனைவர் . நளினி கேசவராஜ், சிவமூர்த்தி, லூமினன்ஸ் நிறுவனம் சுதர்சன் பிள்ளை, ஆற்காட் அமைப்பைச் சேர்ந்த அதிசய குமார், ஹரிஷ், பிரசன்னா குமாரி மோகன் குமார் ரத்தினகுமார், செல்வம், ஷீலா குமார் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இதில் ஆற்காட் தொண்டு நிறுவனம் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



