திண்டுக்கல், செப்டம்பர் 24 –
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் அதிமுக ஆலோசனை கூட்டம் மற்றும் தேர்தல் பயிற்சி whatsapp குழு இணைப்பு நடைபெற்றது. இதில் முன்னாள் அதிமுக அமைச்சர் இரா நத்தம் விஸ்வநாதன் தலைமையில் மாற்றுக் கட்சியினர் இணைந்தனர். வரவேற்ற நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர், ஒன்றிய கழக செயலாளர் யாகப்பன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார், பேரூர் கழக செயலாளர் சேகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மோகன்ராஜ், கழகத் தோழர்கள் அனைவரும் சேர்ந்து மாற்றுக் கட்சியில் இருந்து வந்த மதிப்பிற்குரிய அண்ணன் நாகேந்திரன் (பிஜேபி) மற்றும் குடலை குண்டு தலைவர் பெரியசாமி (திமுக), 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அதிமுகவில் இணைந்தனர். அனைவரையும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சால்வை போட்டு அன்போடு அரவணைத்தார். ஆலோசனை கூட்டத்தில் அனைவரையும் வரவேற்ற ஒன்றிய கழக செயலாளர் யாகப்பன் அதிமுகவில் இணைந்த அனைவருக்கும் சால்வை போட்டு மரியாதை செலுத்தினார்.



