களியக்காவிளை, ஜூன் 24 –
மேல்புறம் ஒன்றிய பி எம் எஸ் அலுவலக திறப்பு விழா குழித்துறை சந்திப்பில் நடைபெற்றது. புதிய அலுவலகத்தை பாரத மாதா சேவா டிரஸ்ட் தலைவர் சுகுமாரன் ஜி திறந்து வைத்தார். ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ரங்க பாய் திருவிளக்கு ஏற்றி வைத்தார். பி.எம்.எஸ் மாநில தலைவர் வெங்கட்ராகவன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சங்கர் அலுவலக பெயர் பலகை திறந்து வைத்தார். அரங்கு சாமி சங்க பெயர் பலகை திறந்து வைத்தார். பி. எம்.எஸ்.சின் மாவட்ட தலைவர் மணிகண்டன் அம்பேத்கர் படத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து நடந்த வாழ்த்தரங்கத்தில் ஒன்றிய தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.ஒன்றிய பொதுச்செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். பி. எம். எஸ் அகில பாரத தலைவர் மல்லேசம் ஜி பேசினார். வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரம சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், ஆசியுரை வழங்கினார். பி. எம். எஸ்.ன் அகில பாரத பொறுப்பாளர் துரைராஜ், பி. எம். எஸ் தென்பாரத அமைப்பு செயலாளர் ராஜீவன் உள்ளிட்டோர் பேசினர். இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பாரத மாதா டிரஸ்டு தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.



