By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!
சேலம்தமிழ்நாடு

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

Last updated: September 1, 2026 3:50 pm
September 1, 2026
4 Views
Share
SHARE

சம்பா சாகுபடியை பாதுகாக்க நடவடிக்கை

சேலம், செப். 1:

சேலம் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் மற்றும் காவிரி டெல்டா பாசனத்திற்காக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தண்ணீரை திறந்து வைத்தார். தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை மற்றும் எல் நினோ தாக்கத்தை கருத்தில் கொண்டு, குறைந்த அளவிலான நீரை சிக்கனமாக பயன்படுத்தி சம்பா சாகுபடியை பாதுகாக்கும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

செப். 1 காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.56 அடியாகவும், நீர் இருப்பு 54.45 டி.எம்.சி. ஆகவும் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 10,857 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து, பாசன தேவைக்கேற்ப நீர் வெளியேற்றம் படிப்படியாக முறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் ஒவ்வொரு கனஅடி நீரும் விவசாயிகளின் நலனுக்காக முறையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவிரி ஆறு மற்றும் கால்வாய்களில் சட்டவிரோதமாக மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சுதல், அனுமதியின்றி நீர் எடுத்தல் உள்ளிட்ட செயல்களை தடுக்க நீர்வளத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் அடங்கிய கூட்டு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட உள்ளன.

காவிரி நீர் தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ உரிமை என்றும், நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை பெற அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.

மேலும், நீரை சிக்கனமாக பயன்படுத்தி கடைமடை வரை முறையாக பகிர்ந்தளித்து சம்பா சாகுபடியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். குறைந்த நீர் தேவையுள்ள மத்திய கால நெல் ரகங்கள் மற்றும் நேரடி நெல் விதைப்பு போன்ற சாகுபடி முறைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், சிவகுமார், பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே கடனாக கொடுத்த பணம் நகைகளை திருப்பி கேட்டவர்கள் மீது தாக்கு: 3 பேர் மீது வழக்கு
நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய ஆணையராக ஐஸ்வர்யா பொறுப்பேற்றார்
அதிமுக கட்சியை மட்டுமல்ல, தமிழக மக்களுடைய உணர்வுகளையும் பாஜகவிடம் அடிமைப்படுத்திட்டது: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
கருங்கல் அருகே நள்ளிரவில் பைக் வீலிங் செய்து வாலிபர்கள் அட்டகாசம்; துரத்தி அடித்த கிராம மக்கள்
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது அதை ஆவணப்படுத்த வேண்டும்: அரசு ஆயுர்வேதா கல்லூரி முதல்வர் அறிவுரை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

திருப்பூரில் ‘பில்ட் எக்ஸ்போ 24’ கண்காட்சி துவக்கம்!!

July 6, 2024
253 Views
நாம் தமிழர் கட்சியினர் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு ஒரு மருத்துவ கல்லூரிக்கு கூட இடத்தை பெற்றுத்தர முடியவில்லை; டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு
அம்பேத்கரின் பிறந்தநாள் அரசியல் கட்சி மரியாதை
போலீஸ் வழக்கு பதிவு செய்ததால் டிரைவர் தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account