மார்த்தாண்டம், செப். 9 –
மார்த்தாண்டம் ரயில் நிலையம் அருகே பைக் திருட்டு போனது. கிள்ளியூர், மார்த்தாண்டம் பத்து வீட்டைச் சேர்ந்தவர் அஜித் மகன் ஆகாஷ் (20). இவர் தனக்கு சொந்தமான பைக்கை மார்த்தாண்டம் ரயில்வே நிலையம் அருகாமையில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் மாலை வந்து பார்த்தபோது பைக்கை யாரோ திருடி சென்றுள்ளனர். இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


