மார்த்தாண்டம், நவ. 8 –
மலையடி குட்டி பிலாவிளையை சேர்ந்தவர் ஜீவராஜ். இவரது மனைவி ஆரதி ஜோஸ் (37). இவர் கனரா பேங்கில் கிளார்க்காக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று கழுவன்திட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவரது மகன் விவேக் (28) என்பவர் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் சென்று அவரது இருசக்கர வாகனத்தில் மோதியதில் ஆரதி ஜோஸ் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார். அதேபோல சாலையில் நடந்து சென்ற குறூமத்தூர் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் (71) என்பவரும் படுகாயம் அடைந்தார். இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


