மார்த்தாண்டம், பிப். 24 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் நாகர்கோவில் ரயில்வே ஸ்டேஷனில் 1984 ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லையானது திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் துவங்கி கேரள மாநிலம் பாறசாலை ரயில்வே ஸ்டேஷன் வரை எல்லை சுமார் 127 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கியது.
நாகர்கோவில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் நடைபெறும் குற்ற சம்பவங்கள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க அதிக நேரமும் பயண தூரம் இருந்தது. ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு குழித்துறை ரயில் நிலையத்தில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டு அதற்கான அரசாணை 2025-ல் அன்று பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி குழித்துறையில் புதிய ரயில்வே போலீஸ் ஸ்டேஷனை திருச்சி ரயில்வே எஸ்பி ராஜன் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். திருவனந்தபுரம் கோட்ட பாதுகாப்பு ஆணையர் முகமது ஹனீப் முன்னிலை வகித்தார். திருநெல்வேலி ரயில்வே டிஎஸ்பி இளங்கோவன், மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் கேதரின் சுஜாதா திருநெல்வேலி இன்ஸ்பெக்டர் பிரியா மோகன், சப் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி ரயில்வே எஸ்பி ராஜன் கூறியதாவது: ரயில்வே பயணிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக மார்த்தாண்டத்தில் குழித்துறை ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி ரயில்வே போலீஸ் கோட்டத்தில் 25 வது ஸ்டேஷன் ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது ஸ்டேஷன் ஆகும்.
நாகர்கோவில் டவுன் ரயில்வே ஸ்டேஷன் முதல் பாறசாலை வரை 33 கிலோ மீட்டர் இதன் எல்லையாக உள்ளது. ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு உட்பட போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ரயில்வே எஸ்பி ராஜன் கூறினார்.
மார்த்தாண்டம் பகுதியில் ரயில்வே சம்பவங்கள் நாகர்கோவில் ரயில்வே ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வந்தது. நேற்று முதல் இந்த ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது



