By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027ன் ஒரு பகுதியாக வீடுவீடாக கணக்கெடுக்கும் பணி: மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்து நேரில் பார்வையிட்டார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027ன் ஒரு பகுதியாக வீடுவீடாக கணக்கெடுக்கும் பணி: மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்து நேரில் பார்வையிட்டார்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027ன் ஒரு பகுதியாக வீடுவீடாக கணக்கெடுக்கும் பணி: மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்து நேரில் பார்வையிட்டார்

Last updated: August 1, 2026 6:11 pm
August 1, 2026
1 View
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 1 –

கிருஷ்ணகிரி நகராட்சி, ஜக்கப்பன் நகர், 18 வார்டு, முதல் குறுக்கு தெரு பகுதியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027- வீடுவீடாக கணக்கெடுக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ்குமார் இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்.

அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ன் ஒரு பகுதியாக வீடுவீடாக கணக்கெடுக்கும் (House Listing Operations) பணி துவக்கப்பட்டுள்ளது. இப்பணி 01.08.2026 முதல் 30.08.2026 வரை மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது. இப்பணிக்காக மாவட்டம் முழுவதும் 2,660 கணக்கெடுப்பாளர்கள் (Enumerators) மற்றும் 418 மேற்பார்வையாளர்கள் (Supervisors) நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்வார்கள்
கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் அனைத்து கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களும் அரசு வழங்கிய அடையாள அட்டையுடன் வருகை தருவார்கள். பொதுமக்கள் தங்களின் அடையாள அட்டையை உறுதிப்படுத்திக் கொண்டு, தேவையான விவரங்களை வழங்கி முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கணக்கெடுப்பின்போது பெறப்படும் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு, கணக்கெடுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ புள்ளிவிவர நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பொதுமக்களும் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியை வெற்றிகரமாக நடத்த உதவுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ்குமார் தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், மாவட்ட புள்ளியியல் அலுவலர் குப்புசாமி, கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சேகர், தனி வட்டாட்சியர் வெங்கடேசன், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் ராஜலட்சுமி, நகரமைப்பு அலுவலர் மலர்விழி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை எம்பி ஆறுதல்
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா: வடுகபட்டியில் தவெக சார்பில் மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
நேரக்கட்டுப்பாட்டை மீறிய டாரஸ் வாகனங்கள்: நடவடிக்கை எடுத்த கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார்
தூத்துக்குடி வடக்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
அண்ணாமலை பிரிந்து சென்றதால் பா ஜனதாவில் வெற்றிடம் ஏற்படவில்லை: நைனார் நாகேந்திரன் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மின் நிலையத்தில் நாளை மின் தடை அறிவிப்பு

September 12, 2024
65 Views
அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களையும் இணைக்க வேண்டும்: திருப்பூர் விவசாயிகள் நல முன்னேற்ற சங்கம் குறைகேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல்
குற்றியாறு ரப்பர் தோட்ட குடியிருப்பில் வீட்டுக் கதவை உடைத்த ஒற்றை யானை
பெண்களுக்கான இலவச பயிற்சி துவக்க விழா
15 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account