களியக்காவிளை, பிப். 11 –
களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சையை உறுதி செய்திடும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் இப் பள்ளி மாணவர்களுக்கு உடல் வளர்ச்சி, கண்பார்வை, பற்கள் மற்றும் பொது ஆரோக்கியம் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பரிசோதனை முகாமுக்கு பள்ளி தலைமையாசிரியை ரஜினி தலைமை வகித்தார். பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் மாகீன் அபுபக்கர் முன்னிலை வகித்தார். மேல்புறம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய தேசிய குழந்தைகள் நலத்திட்ட மருத்துவர் பிரியா மற்றும் பகுதி சுகாதார செவிலியர் தேன்மொழி, மருந்தாளுநர்கள் ஆல்பின் பால், லதா செல்வகுமாரி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் பள்ளி ஆசிரியைகள லேகா, பினி சந்திரா, பள்ளி கிராம கல்விக் குழு தலைவர் சுரேஷ்குமார், களியக்காவிளை பேரூராட்சி வார்டு உறுப்பினர் ரிபாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



