By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேரணாம்பட்டு பகுதியில் தொடரும் மணல் கொள்ளை: தடுத்து நிறுத்தக் கோரி வேலூர் மாவட்ட எஸ்பியிடம் விவசாயிகள் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பேரணாம்பட்டு பகுதியில் தொடரும் மணல் கொள்ளை: தடுத்து நிறுத்தக் கோரி வேலூர் மாவட்ட எஸ்பியிடம் விவசாயிகள் மனு
குற்றம்தமிழ்நாடுவேலூர்

பேரணாம்பட்டு பகுதியில் தொடரும் மணல் கொள்ளை: தடுத்து நிறுத்தக் கோரி வேலூர் மாவட்ட எஸ்பியிடம் விவசாயிகள் மனு

Last updated: February 4, 2026 6:03 pm
February 4, 2026
36 Views
Share
SHARE

வேலூர், பிப். 04 –

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா, மலட்டாறு படுகையில் நடைபெறும் தொடர் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) சார்பில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்தச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ். உதயகுமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பேரணாம்பட்டு தாலுகா, குண்டலப் பள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அத்திக்குப்பம், சிவனகிரி, குடிப்பள்ளி, குண்டலப்பள்ளி போன்ற பகுதிகளில் பாயும் மலட்டாறு படுகையில், மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் சட்டவிரோதமாகத் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருகிறது.

இந்தத் தொடர் மணல் கொள்ளையினால் அப்பகுதியில் உள்ள தடுப்பணை சேதமடைந்து வருகிறது. மேலும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால், பஞ்சாயத்து பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் வற்றிப்போனதால் விவசாயத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள், அதனைத் தடுக்கும் விவசாயிகளின் நிலங்களுக்குள் புகுந்து தேங்காய், மாம்பழம் மற்றும் மின் மோட்டார் ஒயர்களைத் திருடிச் செல்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பிற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

ஆனந்தகிரி சோதனைச் சாவடி வழியாக முக்கியப் பிரமுகர்கள் வரும் நேரத்தில், காவல் துறையினரின் கவனம் திசைமாறும் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு இத்தகைய சமூக விரோதச் செயல்கள் தடையின்றி நடைபெறுகின்றன.

எனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக தலையிட்டு, ஆனந்தகிரி சோதனைச் சாவடியில் கூடுதல் காவலர்களை நியமித்து, மலட்டாறு படுகையில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மீது அவதூறு பரப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் பாஜக நிர்வாகிகளை கண்டித்து திமுகவினர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார்
ஆசாரிபள்ளம் அருகே காரில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கொட்டாரம் டிரைவர் கொலை: உண்மை குற்றவாளியை போலீஸ் பாதுகாப்பதாக எஸ்பி அலுவலகம் முன்பு குவிந்த மக்கள்
தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்!
அம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

January 5, 2026
23 Views
பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டி
தருமபுரியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ரூ. 7 கோடியே 6 இலட்சம் செலவில் குடி தண்ணீர் வசதி
திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கமும், ஶ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியும் இணைந்து கோடைகால கேரம் பயிற்சி முகாம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account