தருமபுரி, செப்டம்பர் 11 –
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியாம்பட்டி, கோவிலூர் ஆகிய ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பெரியாம்பட்டி சமுதாய குடத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை, பட்டா சிட்டா பெயர் மாற்றம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, இலவச வீட்டு மனை பட்டா ஆகியவை வேண்டி பொதுமக்கள் துறை சார்ந்த அலுவலர்களிடம் விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து வழங்கினார்கள்.
மருத்துவ முகாமில் பிபி, சக்கரை நோய் ஆகிய பரிசோதனைகளை பொதுமக்கள் செய்து கொண்டனர். இந்த முகாமில் ஒன்றிய செயலாளர் டி. அன்பழகன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை பார்வையிட்டார். இந்த முகாமில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



