தருமபுரி, மே 26 –
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதிகளில் பெய்த தொடர் கனமழையினால் தேசியநாயக்கன் ஏரி முழுவதுமாக நிரம்பி உபரி நீர் வெளியேறும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அருகில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் கழிவுநீர் சூழ்ந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது 8 1/2 ஏக்கர் பரப்பளவு கொண்ட தேசிய நாயக்கன் ஏரி நகரப் பகுதியில் போதிய சாக்கடை வசதி இல்லாததால் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அனைத்தும் தேசிய நாயக்கன் ஏரியில் தேங்கி வந்தது. கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் தேசிய நாயக்கன் ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்தி நடைபாதை அமைப்பதற்கான ஒப்பந்தம் தனியாருக்கு விடப்பட்டது.
முதற்கட்டமாக ஏரியில் உள்ள கழிவுநீரை வெளியேற்றும் போது கால்வாய் ஆக்கிரமிப்பு தெரிய வந்து மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டும். கழிவுநீர் அகற்ற முடியாமல் ஏரியிலேயே தேங்கி நின்றது. ஒரு வாரம் பணி காலம் தாமதமானதால், நிதி ஒதுக்கீட்டை மீண்டும் மாவட்ட நிர்வாகம் பெற்றது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பென்னாகரம் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் தேசிய நாயகன் ஏரி முழுவதுமாக நிரம்பியது. அண்மையில் அதிகாரிகளால் அமைக்கப்பட்ட கால்வாயில் கழிவு நீர் வெளியேறாததால், அருகிலுள்ள சுண்ணாம்பு கார தெரு பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவு நீர் புகுந்து துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. கழிவுநீர் புகுந்ததால் ஒரு சிலர் வீட்டை காலி செய்தும், பலர் வீடுகளில் புகுந்த கழிவு நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் பேரூராட்சி ஊழியர்கள் நிகழ்வு இடத்திற்கு வந்து மோட்டார் மூலம் கழிவுநீரை வாகனத்தில் எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து குடியிருப்புகளுக்குள் வடிய வடிய கழிவு நீர் சூழ்ந்து வருகிறது. வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்ததால் பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து பென்னாகரம் வட்டாட்சியர் ஆறுமுகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
இதன் அடிப்படையில் பேரூராட்சி துறை அதிகாரிகளுடன் தேசிய நாயக்கன் ஏரி பகுதியினை ஆய்வு மேற்கொண்டு வடக்கு புறம் ஏற்கனவே அமைப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட கால்வாய் பணியினை முற்றிலுமாக சீர் செய்து அதன் வழியாக கழிவுநீர் வெளியேற்றும் பணியை தொடங்கி வைத்தார். புறவழி சாலையில் வழிந்து ஓடிய கழிவுநீர் பென்னாகரம் தேசிய நாய்கன் ஏரியின் கரை உடைக்கப்பட்டு வெளியேறிய நீரானது முள்ளுவாடி, முதுகம்பட்டி சாலை, புறவழி சாலை ஓரங்களில் உள்ள கால்வாய்களின் செல்லும்போது கோட்டை ஏறிக்குச் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்பால் கழிவுநீர் செல்ல முடியாமல் பென்னாகம் புறவழி சாலையில் தண்ணீர் பெருகெடுத்து ஓடியது.
சாலையில் இரண்டு அடிக்கு மேல் தேங்கி நின்ற தண்ணீரை பென்னாகரம் நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் சிங்காளவேலன் தலைமையிலான நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி வாகனத்தின் மூலம் புறவழி சாலையின் நடுவே உள்ள தடுப்புகளை அகற்றி கோட்டை ஏறிக்கு தண்ணீர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்தனர். இதனால் பென்னாகரம் புறவழி சாலை முள்ளுவாடி பகுதிக்கு செல்லக்கூடிய சாலைகளில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது.



