புதுக்கடை, மார்ச் 25 –
இனயம் கடற்கரை கிராம பகுதியை சேர்ந்தவர் மரியதாசன் (61), மீனவர். இவருக்கு கிங்ஸ்லி என்ற மனைவி உள்ளார். மனைவி 2 மாதங்களாக அருகில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி இருந்துள்ளார். மரியதாசன் தினமும் தனது மகள் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு, தனது வீட்டில் வந்து தங்குவது வழக்கம்.
நேற்று காலை மரியதாசன் மகள் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். பின்னர் மதிய உணவுக்கு அவர் மகள் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி கிங்ஸிலி வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது படுக்க அறையில் கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக தனது மகள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மரியதாசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


