சுசீந்திரம், நவ. 26 –
சுசீந்திரம் அருகே உள்ள பறக்கை கடேற்றியை சார்ந்தவர் சுபா மாலினி (38). இவர் வயல் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் அதே ஊரை சார்ந்த மகேஷ் சந்திர போஸ் என்பவர் இவரை வெளியே செல்லும் போது பின் தொடர்ந்து வந்து தகாத முறையில் பேசி தொந்தரவு செய்து உள்ளார். இதனால் சுபா மாலினி தனது கணவரிடம் கூறியுள்ளார். அவரது கணவர் மகேஷ் சந்திரபோசை கண்டித்துள்ளார்.
இதனால் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் முன்பு சுபா மாலினி நிற்கும் போது மகேஷ் சந்திரபோஸ் தகாத வார்த்தைகளால் பேசி வெட்டுக்கத்தியின் பின்பகுதியை திருப்பி வைத்து தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளார். பின்பு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றுள்ளார். இது குறித்து சுபா மாலினி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மகேஷ் சந்திரபோசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


