புதுக்கடை, ஜன. 14 –
புதுக்கடை அருகே ஐரேனிபுரம், பண்டாரக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் மகன் அர்ஜுன் (30). இவர் கூலி வேலை செய்து வந்தார். நேற்று இவர் சானல் மூக்கு என்ற பகுதியில் உள்ள ஒரு கடை அருகில் உயரமான பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அஜினுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். தாயார் லலிதாபாய் மகனை மருத்துவமனைக்கு அழைத்தும் செல்லவில்லை.
சிறிது நேரத்தில் வீட்டில் வைத்து திடீரென அஜினுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாலை 4 மணியளவில் அஜின் உயிரிழந்தார். இது குறித்து தாயார் லலிதா பாய் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


