சுசீந்திரம், ஆக. 18 –
உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஜெயராமபாண்டியன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரநாராயணன், பிரவீன் ரகு, ரவி, ஜெஃப்ரி மோள், சக்தி முருகன் அடங்கிய குழு ஆலங்கோடு (தக்கலை வட்டாரம்) மற்றும் செக்காரவிளை (குருந்தன்கோடு வட்டாரம்) ஆகிய பகுதிகளில் நடத்திய திடீர் சோதனையின் போது, இரண்டு கடைகளில் தடை செய்யப்பட்ட கணேஷ் மற்றும் கூல் லிப் புகையிலை பொட்டலங்கள் இருந்தன. புகையிலை பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உடனடியாக இரண்டு கடைகளும் மூடப்பட்டது


