சிவகங்கை, செப். 9 –
சிவகங்கை மாவட்டம் அரசனூர் பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக மலேசியாவின் பிரதமர் துறை (சட்டம் மற்றும் சர்வதேச சீர்திருத்தங்கள்) துணை அமைச்சர் ஓய்.பி.எம். குலசேகரன் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் கலந்து உரையாடினார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சிறப்பு மற்றும் சட்ட அதிகாரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் முனைவர். டாக்டர். எம் அப்துல்கனி கான் முன்னிலையில் மலேசியா சட்டத்துறை அமைச்சர் ஓய்.பி.எம் குலசேகரன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட குலசேகரன் அவர்களை கல்லூரி முதல்வர் டாக்டர் எம். பொன்னையா நாகேஸ்வரன் மற்றும் பிரிஸ்ட் பல்கலைக்கழக சிறப்பு மற்றும் சட்ட அதிகாரி டாக்டர் எஸ். நித்தியானந்தம் மற்றும் கல்லூரி டீன் ஷாஜி ஆகியோர் வரவேற்றனர். மலேசியா சட்ட அமைச்சர் அவர்களுக்கு நினைவு பரிசாக மெமண்டோ கல்லூரி முதல்வர் வழங்கினார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய குலசேகரன் தமது வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொண்டார் சட்டத்துறையில் பெற்ற அனுபவங்களையும் மாணவர்களுடன் கலந்து பேசினார். அவரது தொழில் முறை பயணம் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் சட்டக் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் அவர் விரிவாக கூறினார். அவர் மேலும் மலேசியாவில் உள்ள AlAC (Asian international Arbitration centre) பற்றியும் அந்த நிறுவனம் இளம் வழக்கறிஞர்களுக்கான (Arbitration) துறையில் ஏற்படும் வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக மாணவர்கள் சட்ட பயிற்சி ஆட்சி மற்றும் உலகளாவிய சட்டப் போக்குகள் குறித்து கேள்விகள் எழுப்பினர். குலசேகரன் மாணவர்களை தங்கள் கல்வியில் முழுமையாக ஈடுபடவும் சமூக நீதியை பேணும் முயற்சிகளில் ஈடுபடவும் ஊக்குவித்தார். ஒரு முக்கிய அறிவிப்பாக அவர் பிரிஸ்ட் பல்கலைக்கழக மாணவர்கள் மலேசிய நாடாளுமன்றத்தில் பயிலுனர் பயிற்சியை (internship) பெறக்கூடிய வாய்ப்பு குறித்து பேசினார்.
இது மாணவர்களுக்கு சர்வதேச அனுபவம் மற்றும் நடைமுறை பெற்றோருக்கான புதிய வாயிலாக அமையும் இந்த சந்திப்பு பல்கலைக்கழக மாணவர்களால் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. மாணவர்கள் ஒரு சர்வதேச சட்டத்துறை நிபுணரிடம் இதுகுறித்து அறிவுரை பெறும் வாய்ப்பு கிடைத்ததாக கூறி மகிழ்ச்சி தெரிவித்தனர். விழாவின் முடிவில் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் எம். ஷால் நன்றி உரை கூறினார்.



