தருமபுரி, ஏப்ரல் 29 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வழியாக ராஜஸ்தானில் இருந்து குட்கா கடத்துவதாக மாவட்ட போலீஸ் மகேஸ்வரனுக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க அவர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர வாகன சாதனையில் ஈடுபட்டனர். அதன்படி பாலக்கோடு காவல்துறையினர் கரகதஅள்ளி சுங்க சாவடி அருகே வாகன சோதனை ஈடுபட்டனர்.
அப்போது கிருஷ்ணகிரி பக்கம் இருந்து வந்த காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர். மேலும் காரில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரிய வந்தது. இது குறித்து காவல்துறையினர் கார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் ராஜஸ்தான் மாநிலம் பார்வீர் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (38) என்பதும் சேலத்திற்கு குட்கா கடத்திய வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர் . மேலும் 82 கிலோ மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.


