மார்த்தாண்டம், ஏப். 1 –
கிள்ளியூர் தாலுகா தேர்தல் பறக்கும் படை அதிகாரி மகாலட்சுமி தலைமையிலான குழுவினர் இன்று காலை 6 மணி அளவில் நித்திரவிளை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் பைக் அறையில் 90 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டறியப்பட்டது. பணம் குறித்து விசாரித்த போது, கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட பகுதியை சேர்ந்த சுனில் குமார் என்பவர் தேங்காபட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் வாங்க பணம் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.
அதே வேளையில் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பறக்கும் படை அதிகாரி ரூபாயை பறிமுதல் செய்து கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தார்.


