நாகர்கோவில், செப். 12 –
குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் கடுமையான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று நாகர்கோவில் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் 1 கிலோ 500 கிராம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய ஒரு கார், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய விசரணையில் பிடிபட்டவர்கள் திருவனந்தபுரம், பக்சான்குளி பகுதியை சேர்ந்த ரபீக் என்பவரின் மகன் கமல் யூசுப் (27), மாதவலாயம், மைதீன்புரம் பகுதியை சேர்ந்த முகமது ஷாஜி என்பவரின் மகன் ஷாஜகான் (22), சிறமடம், ஞாலம் பகுதியை சேர்ந்த தேவதாசன் என்பவரின் மகன் புரூஸ்லீ (35) ஆகிய மூன்று பேர் என தெரிய வந்தது. போலீசார் 3 பேரை சிறையில் அடைத்தனர்.
போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை மேலும் தீவிரபடுத்தப்படும். போதை பொருள் விற்பனை செய்பவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுபவர் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.



