மார்த்தாண்டம், நவ. 8 –
பளுகல் அருகே உள்ள இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் சிகாமணி (70). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்களில் கடைசி மகன் சுனில் குமார் (37) என்ற மகனுக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் சிகாமணி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, அவரது கால அகற்றப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மகன்கள் தங்களது வீட்டருகே தனியாக ஒரு அறை அமைத்து சிகாமணியை தங்க வைத்து கவனித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் சிகாமணிக்கும் கடைசி மகன் சுனில்குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. படுத்த படுக்கையில் உள்ள தந்தையை கொன்று விடுவேன் என்று மிரட்டிய சுனில்குமார், வீட்டுக்குள் சென்று பெயிண்டில் கலக்க பயன்படுத்தும் டர்பன் திரவத்தை எடுத்து வந்து சிகாமணி மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியதாக கூறப்படுகிறது. சிதாமணிக்கு கால் இல்லை என்பதால் அவரால் ஓட முடியவில்லை. அவர் உடல் கருகி அலறினார். அக்கம் பக்கத்தினர் பி ஓடி வந்து அவரை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளார். இதுல அவருக்கு 50 சதவீத தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


