நாகர்கோவில் ஜூலை 7
குமரிமாவட்ட பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் அரசு பேருந்துகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி வெளிமாவட்டத்தை சேர்ந்த பெண்கள் பயணிகளிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இப்ப பெண்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடமிருந்து செயின் மற்றும் பணங்களைத் திருடுவது மட்டுமல்லாமல், குழந்தைகளிடம் உள்ள தங்க நகைகளையும் திருடி விடுகின்றனர். இப்பெண்களைப் போன்ற திருடர்களிடம் நகை பணம் போன்றவற்றை பறிகொடுத்து விட்டு நகை பணத்தை இழந்தவர்கள் படும் வேதனை கொஞ்சம் நஞ்சமல்ல மேலும் நகைகளை திருட்டு கும்பலிடம் பறிகொடுத்தவர்கள் காவல் நிலையம் சென்று புகார் அளித்து விட்டு நகைகள் கிடைத்துவிடும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று நாகர்கோவிலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்த பெண்ணை பொது மக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவத்தை தொடர்ந்து பேருந்து பயணத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டில் ஈடுபடும் பெண்களை கண்காணித்து அவர்களை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் அறிவுறுத்தியதின் பெயரில் போலீசார் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



