சென்னை, பிப். 20 –
தெற்கு ஆசியாவின் முன்னணி ட்ரெய்லர் மற்றும் டிரக் பாடி உற்பத்தியாளர் நிறுவனங்களில் ஒன்றான “ஸட்ராக் ” நிறுவனம் சென்னையில் புதிய அதிநவீன உற்பத்தி நிலையத்தை தொடங்கியது. இந்த புதிய தொழிற்சாலை, வணிக வாகன பாடி கட்டுமானத் துறையில் 30 ஆண்டுகளாக நிறுவனம் மேற்கொண்டுவரும் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.
புதியதாக தொடங்கப்பட்ட சென்னை தொழிற்சாலை 6.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 3.5 ஏக்கர் உற்பத்தி பகுதியை கொண்டது. இங்கு மாதத்திற்கு 800க்கும் மேற்பட்ட யூனிட்கள் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. இந்த நிறுவனம் மேம்பட்ட உள்கட்டமைப்பு, நவீன தானியங்கி அமைப்புகள் மற்றும் உலகத் தரத்திலான உற்பத்தி செயல்முறைகளுடன் அமைந்துள்ளது. இந்த வகையில் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ஆலையாக இது திகழ்கிறது.
ஸடார்க் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.சி. பண்ட்வால் கூறும்போது, “இந்த புதிய தொழிற்சாலையின் மூலம், இந்தியாவில் ட்ரெய்லர் மற்றும் டிரக் பாடி உற்பத்தித் துறையின் தரநிலையை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தியுள்ளோம். ரோபோடிக் வெல்டிங் மற்றும் மேம்பட்ட தயாரிப்பு செயல்முறைகள் முதல் ஒருங்கிணைந்த வடிவமைப்பு மற்றும் தர மேலாண்மை அமைப்புகள் வரை, எந்தவித சமரசமும் இல்லாத பாதுகாப்பு, நீடித்த தன்மை மற்றும் பொறியியல் துல்லியத்துட உலகத் தரமான தயாரிப்புகளை உருவாக்கும் எங்கள் உறுதியை இந்த தொழிற்சாலை பிரதிபலிக்கிறது.” என்றார்.
தொடக்க விழாவில் டைம்லர் இந்தியா வணிக வாகனங்கள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான டோர்ஸ்டென் ஸ்சமிடட் பேசும்போது:- ‘ஸட்ராக்’ நிறுவனம் தங்களது நிறுவனம் தொடங்கிய காலத்திலிருந்தே மதிப்புமிக்க கூட்டாளியாக இருந்து வருகிறது. கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக, டிப்பர் பாடி விநியோகத்தில் தரம், நேர்த்தியான வழங்கல் செயல்திறன் மற்றும் வாடிக்கையாளர் சேவையில் அவர்கள் தொடர்ந்து சிறப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பாரத் பென்ஸ் தனது ஹெவி-டூட்டி டிரக் வரிசையின் மூலம் இந்தியாவின் கட்டுமான மற்றும் சுரங்கத் துறைகளில் முன்னணித் தலைமையைவலுப்படுத்தி வரும் நிலையில், தங்களது உற்பத்தி ஆலைக்கு அருகில் ‘ஸட்ராக்’ போன்ற உயர்தர நிறுவனம் இருப்பது முக்கியமான மூலோபாய நன்மையாக இருக்கும் என்று தெரிவித்தார்.



