தருமபுரியில் டாக்டர், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு ஜே. சி. ஐ, மகாலட்சுமி சில்க்ஸ், சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி, கமலம் இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து நடத்திய மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து நான்கு ரோடு வரை சென்று முடிவடைந்தது. இதில் 2024 -2025 ஆண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் மஞ்சள் பை, சாலை விதிகள் கடைபிடிப்பது குறித்தும் புகை, போதைக்கு எதிராக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணியில் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி, கமலம் இன்டர்நேஷனல் பள்ளியின் மாணவிகள் விளம்பர அட்டையில் கையில் ஏந்தியவாறு ஆயிரம் மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.



