சுசீந்திரம், செப். 9 –
தென்குமரி பத்திரிக்கையாளர் சங்க கூட்டம் சுசீந்திரத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. தொடக்க நிகழ்வாக மூத்த பத்திரிகையாளர் ரவி வரவேற்பு உரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் சங்கத் தலைவராக கிறிஸ்பின் இன்ப கால்வின், செயலாளராக ராஜன், பொருளாளராக ராமகிருஷ்ணன், துணைத் தலைவராக சண்முகம் பிள்ளை, இணைச் செயலாளர்களாக மணிகண்டன், கணேஷ லிங்கம், செயற்குழு உறுப்பினர்களாக சரவணன், பழனி, ரவி, சுகிர்தன், தங்கலிங்கம், மதன்குமார், ராஜா சிங், ஆனந்தராஜ் ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து சங்கத்தை வலுப்படுத்துவது தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில் இணைச்செயலாளர் கணேஷ லிங்கம் நன்றியுரையாற்றினார்.



