By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிகாலை மாடி வீட்டில் தஞ்சம் அடைந்த மிளா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அதிகாலை மாடி வீட்டில் தஞ்சம் அடைந்த மிளா
கனஂனியாகுமரிமாவட்டம்

அதிகாலை மாடி வீட்டில் தஞ்சம் அடைந்த மிளா

Last updated: March 14, 2025 10:04 am
March 14, 2025
42 Views
Share
SHARE

நாகர்கோவில் மார்ச் 13

 

குமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடதிலிருந்து டவுன் ரயில்வே ஸ்டேஷன்  செல்லும் சாலையில் பள்ளி விளை அரிசி குடோன் எதிரில் உள்ள வாத்தியார் விளையில்  ஒரு வீட்டில் காட்டில் இருந்து தப்பி வந்த கடமான்(மிளா) ஒன்று தஞ்சமடைந்தது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் பத்திரமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டனர்.

 

பூதப்பாண்டி வனச்சரகத்திற்குட்பட்ட வாத்தியார் விளை பகுதியில் உள்ள வீட்டில் கடமான் ஒன்று (மிளா ) நேற்று அதிகாலை வீட்டின் மாடியில் ஏறி நின்றதால், பரபரப்பு ஏற்பட்டது. எனவே மாடி வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் கதவை பூட்டிய படி உள்ளே இருந்தனர். அந்த வீட்டில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்தனர். மிளா ஒன்று வீட்டின் மாடியில் வந்து தஞ்சம் அடைந்து இருப்பதாக பரவிய தகவலால் அப்பகுதியினர் ஏராளமானோர் வந்து மிளாவை அதிசயமாக பார்த்து புகைப்படம் எடுத்தும், சிலர் தூரத்தில் நின்று செல்பி எடுத்தும் சென்றனர். இதனைத் தொடர்ந்து  பொதுமக்கள் விரட்டியும் மிளா நகர வில்லை. மிளாவின் உடலில் காயங்களும் இருந்தன. உடனடியாக இது குறித்து வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காலை 8 மணி அளவில் மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் பிரசாந்த் உத்தரவுப்படி பூதப்பாண்டி வனச் சரக அலுவலர் ரவீந்திரன் தலைமையில் வனவர்கள் அசோக், ஜான்மிலன், வனக்காப்பாளர் சிவராமன், வேட்டை தடுப்பு காவலர்கள்,  பிரவீன், ராஜன், இந்திரன், மாசானமுத்து, தனீஸ் அடங்கிய குழுவினர்கள் மற்றும் நாகர்கோவில் பிரிவு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள், அலுவலர்கள் இணைந்து மிளாவை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வீட்டின் மாடியில் நின்ற மிளா பின்னர் அங்கிருந்து தப்பி தெருவில் இறங்கி ஓடியது. வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் கையில் வலையுடன் அதை விரட்டினர்.

 

பின்னர் ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி உள்ளே குதித்த கடமானை மிகவும் போராடி மீட்டனர் , பின்பு வன கால்நடை மருத்துவர்  மனோகரன் அடங்கிய குழுவினர்கள் கடமானின் உடலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அழித்தனர்.  அதைத்தொடர்ந்து வனத்துறையினர் மிளாவை காட்டு பகுதிக்கு கொண்டு சென்று பொய்கை அணை வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர். 

 

சமீபத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. சுங்கான்கடை மற்றும் அதன் சுற்று வட்டார மலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மிளா உள்ளிட்டவை ஊருக்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வீட்டில் இருந்தவர்களும் நிம்மதி அடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஐக்கிய ஜமாத் சார்பில் மாணவர்களுக்கு , கல்வி உதவித்தொகை
மதுரையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் உப கோயில்களில் பாலாலயாபணிகள்
ஹாக்கி லீக் போட்டிகள் பரிசளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்

August 18, 2025
38 Views
பாஜக சிறுபான்மை அணி வேலூர் கபீர் பிறந்த நாள்
வெங்கட்ரமணா சுவாமி கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
களியக்காவிளை அருகே பாஜக பிரமுகர் அடித்து கொலை; காங்கிரஸ் நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் வலை
தி வேலூர் டவுன் டவுன் கேப் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account