தூத்துக்குடி, ஜூலை 4 –
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சாவை காரில் கடத்தி வந்த 2 நபர்கள் கைது. 13 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல்.
தென்பாகம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முகில் அரசன் மற்றும் போலீசார் நேற்று தூத்துக்குடி FCI ரவுண்டானா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில், திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த ராஜா மகன் வள்ளிதுரை (எ) சுஜித் (26) மற்றும் தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியை சேர்ந்த முத்துமாணிக்கம் மகன் செல்வராஜ் (எ) காடை செல்வராஜ் (24) ஆகியோர் என்பதும், அவர்கள் சட்டவிரோத விற்பனைக்காக காரில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்ததையடுத்து 2 நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 13 கிலோ கஞ்சா மற்றும் காரையும் பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



