மதுரை, ஆகஸ்ட் 25 –
மதுரை அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் மேற்கொண்டுள்ள மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்! எனும் எழுச்சிப் பிரச்சாரத்தின் நான்காம் கட்ட பிரச்சார பயணம் மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 1 முதல் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா. சரவணன் Ex. MLA ஏற்பாட்டில் மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் விளம்பர பதாகைகளும் துண்டு பிரசுரங்களும் வாகனங்களில் பிரச்சார ஸ்டிக்கர்கள் ஒட்டுதல் மற்றும் வாக்குறுதி வாசகங்கள் அடங்கிய மின்னொளி தகவல் பலகைகளை தோளில் சுமந்து மக்கள் கூடும் இடங்களில் எழுச்சி பயண அழைப்பிதழ்களை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் எடப்பாடியார் மதுரையில் கலந்து கொள்ளும் எழுச்சி பிரச்சார நிகழ்வுக்கு பெருந்திரளாக வருகை தந்து சிறப்பிக்க வேண்டி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.



