திருவெண்ணெய்நல்லூர், அக். 04 –
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள அரசூர் மலட்டாற்றில் மழை வர வேண்டி வருண பூஜை நடந்தது. பூஜைக்கு “ஜீவநதி மலட்டாறு நிலத்தடிநீர் மேம்பாட்டு எழுச்சிக் கூடல் அமைப்பு” தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கி சிறப்பான ஏற்பாடு செய்திருந்தார். 1972 ம் ஆண்டு மலட்டாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளத்தில் ஆற்றில் ஆங்காங்கே மணல் திட்டுக்கள் உருவானது. இதனால் மலட்டாற்றில் நீர்வரத்து தடைபட்டிருந்தது.
இதையடுத்து கடந்த1991-ம் ஆண்டு முதல் ஜீவநதி அமைப்பின் மூலம் மலட்டாறு துார் வாரப்பட்டு, கடலுார் மாவட்டம், கட்டமுத்துபாளையம் வரை நீர்வரத்திற்கு ஏற்பாடு செய்தனர். அதனையொட்டி மழை வர வேண்டி நேற்று அரசூர் மலட்டாறு கரையில்
பூஜை நடந்தது. இதில் கணபதி ஹோமம், லட்சுமி மற்றும் நவக்கிரஹ ஹோமம், வருண ஹோமம் செய்தனர். பின்னர் ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட கலசநீரை ஆற்றில் ஊற்றி வருண பகவானை வழிபட்டனர். இதில் ஒன்றிய செயலாளர் மா. சந்திரசேகரன், சரவணன், வழக்கறிஞர் சோலையப்பன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



