திருவெண்ணெய்நல்லூர், ஆக. 19 –
திருவெண்ணெய்நல்லூரில் நகர திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ பிறந்தநாள் மற்றும் பவள விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் நகர திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ 75-வது பிறந்தநாள் மற்றும் பவள விழாவை முன்னிட்டு நகர செயலாளர் பூக்கடை கணேசன் தலைமையில் பட்டாசு வெடித்து வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அப்போது கடைவீதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அணைக்கட்டு சாலையில் உள்ள கலைஞர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதில் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோதி, மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் சுரேஷ் பாபு, நகர பொருளாளர் சையத் நாசர், அறங்காவல் குழு தலைவர் ராஜாராம், நகர துணை செயலாளர் தில்லை காமராஜ், நகர மாணவரணி அமைப்பாளர் மாஸ். ராஜ்குமார், கவுன்சிலர்கள் செல்வம், பாக்யராஜ், சதாம், ரகு, நகர மாணவர் அணி துணை அமைப்பாளர் குணசேகர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



