திருவெண்ணெய்நல்லூர், ஆக. 29 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது. திருவெண்ணெய்நல்லூர் அருகே உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொத்தனூர் கிராமத்தில் ஆமூர், மணக்குப்பம் ஆகிய ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு பி.டி.ஒ, முல்லை தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், மாவட்ட கவுன்சிலர் மா. சந்திரசேகரன், துணை பி.டி.ஒ, பிரபாகரன், அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார்.
முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா பெயர் மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம், ரேஷன் கார்டு உள்ளிட்ட 15 துறைகள் சார்ந்த பொது மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பிரேம்குமார், கொத்தனூர் கிளை செயலாளர் திருமால், ஊராட்சி மன்ற தலைவர் சிவராஜ், துலங்கம்பட்டு கிளை செயலாளர் முருகன், ஒன்றிய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பைரவா கண்ணன், மணக்குப்பம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாவப்பன், கிளை செயலாளர் கேசவன், ஒன்றிய ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் முத்து மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



