திருச்சி, ஜூன் 1 –
சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் தவெகவிற்கு ஆதரவளிக்க முடியவில்லை என்றும், கூட்டணி குறித்து தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது என்றும் திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக ஒரு தனி இயக்கம் என்பதால் சுயேச்சையான முடிவுகள் அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர், திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து மே 27-ல் நடைபெறும் பொதுக்குழுவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். மேலும், அரசியல் நெறிமுறையின் அடிப்படையிலேயே புதிய முதலமைச்சர் விஜயை தாம் வரவேற்றதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.



