திருச்சி, மே 16 –
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியைச் சேர்ந்த கிருஷ்ணன் (58) என்பவர் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை 45 B-யில் விராலிமலை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சமத்துவத்தைச் சேர்ந்த கணேசன் (35) என்பவர் ஓட்டி வந்த வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார்.
மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



