கோவை, ஜூன் 25 –
கோவை மாநகர் மாவட்டம், இரத்தினபுரி பகுதி கழக திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் முன்னிலையிலும் பகுதி கழக பொறுப்பாளர் கோவை லோகு தலைமையில் நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு கோவைக்கு திராவிட மாடல் அரசு கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டு எடுத்து கூறினார்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு பேசினார். பாஜக-அதிமுக கூட்டணியை கூறியவர், எடப்பாடியையும் பாஜகவையும் ஓட ஓட மக்கள் விரட்டுவார்கள். 2026 ல் உதிக்கின்ற சூரியனை யாராலும் தடுக்க முடியாது என கூறியவர், 2026-ல் 200தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றி வெற்றி பெறும் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்றார். பெண்களுக்கு நிரந்தரமானது கல்வி தான் என்று அன்றைக்கே கலைஞர் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்.
முத்தமிழ் முருகன் மாநாடு என்று பழனியில் முருகன் மாநாட்டை நடத்தியவர் தலைவர் ஸ்டாலின் அவர்கள். பகுத்தறிவு பிரச்சாரத்தையும் நிறுத்த மாட்டோம்,பக்தி மார்க்கத்தையும் தடுக்க மாட்டோம் என்று கூறியவர் கலைஞர். இப்போது முருகனை வைத்து பாஜகவினர் ஓட்டு பிச்சை கேட்கின்றனர். ஆனால், உண்மையான ஆன்மீக மாநாட்டை நடத்தியவர் எங்கள் தலைவர். 3 ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு செய்தவர் தலைவர். திருச்செந்தூரில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. அங்கு கூடும் கூட்டமே உண்மையான ஆன்மீக கூட்டம். முருகன் தமிழ் கடவுள்.
உலக மொழிகளில் பெண்பால் புலவர்கள் அன்றைய காலத்திலேயே இருந்தது தமிழ்நாட்டில் தான். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கி பயன்படுத்தியவன் தமிழன். பிறந்தநாள் காணும் விஜய்யிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், 2026ல் எங்கள் தலைவர் வெற்றி பெறுவார். எங்கள் தலைவரை வாழ்த்த வாருங்கள் என்று கூறினார்.
இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மேயர் ரங்கநாயகி, எம்பி கணபதி ராஜ்குமார், மண்டல தலைவர் மீனா லோகு, மாவட்ட துணைச்செயலாளர் கோட்டை அப்பாஸ், தீர்மானக்குழு இணைச்செயலாளர் நாச்சிமுத்து, சட்டத்துறை இணைச்செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புசெழியன், செல்வமணி, மெட்டல் கண்ணப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.