ஈரோடு மே 28
அறம் அறக்கட்டளையின் சார்பில் மொடக்குறிச்சி பேரூராட்சி குளூர் ஊராட்சியில் வசிக்கும் பெண்கள் மற்றும் மாணவிகள் 250 பேர் ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் கிருத்திகா சிவ்க்குமார் ஆகியோர் இதை தொடங்கி வைத்தனர். இந்த குழுவினர் பண்ணாரி அம்மன் கோவில், பவானிசாகர் அணைக்கட்டு மற்றும் சிறுவர் பூங்கா, கொடிவேரி நீர்த்தேக்கம் ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.



