தருமபுரி, ஜூன் 23 –
தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தமிழக முதலமைச்சர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி தர்மபுரி அடுத்த பீடமனேரியில் உள்ள விவேகானந்தா காது கேளாதோர் பள்ளியில் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல் ராஜ் தலைமையில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. இதில் இளைஞர் அணி அமைப்பாளர்கள் கோபி, முருகன், வினோத், ரமேஷ், திருப்பதி, ரம்யா தேவி, மைல்ஸ் மற்றும் மாவட்ட, நகர கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



