தருமபுரி, ஆகஸ்ட் 15 –
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டங்கள் செயலாளர்கள் தலைமையில் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள பெரியார் நகரில் ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அவர்களுடைய பகுதியில் குப்பைகள் சுத்தம் செய்வதில்லை, கழிவுநீர் கால்வாய் தூர் வாரப்படுவதில்லை, குடிநீர் வருவதில்லை போன்ற பல்வேறு பிரச்சனைகளை குறித்தும், கிராம சபை கூட்டத்தில் போடும் தீர்மானங்களை நிறைவேற்றுவதில்லை என தெரிவித்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இலக்கியம்பட்டி ஊராட்சி செயலாளர் சரவணன் மற்றும் உதவி திட்ட அலுவலர் லதா ஆகியோர் பொதுமக்களிடம் உங்களுடைய பிரச்சினைகளை சரி செய்து தரப்படும் என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் அரசு அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



