தருமபுரி, ஏப்ரல் 07 –
தருமபுரி ஊராட்சிக்குட்பட்ட முத்துப்பட்டி தேசிய நெடுந்சாலையில் தரைப்பாலம் அமைத்துதர கோரி சவுளூர், குண்டல்பட்டி, நடுஅள்ளி, பால்காரன் கொட்டாய் உள்பட 15 கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கையில் கருப்பு கொடியுடன், தேர்தலை புறக்கணித்து
சேலம் – கிருஷ்ணகிரி நான்கு வழி சாலை அருகே முத்துப்பட்டி பிரிவு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
பாலக்கோட்டில் இருந்து காரிமங்கலம் செல்லும் அரசு பேருந்தை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர். எங்கள் கிராமத்திற்கு தரைபாலம் அமைத்து தராவிட்டால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து, அனைவரும் வாக்காளர் அடையாள அட்டையை அரசிடமே திருப்பி தருவதாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த தகவல் அறிந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் சிவராமன், வட்டாச்சியர் சுகுமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



