சிவகங்கை, 22.08.2026.
சிவகங்கை மாவட்டம், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக ஆட்சி 100 நாட்களை கடந்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் காரைக்குடியில் 100 நாள் சாதனை கூட்டம் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அமைச்சர் பிரபு தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள், இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து கட்சி நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் விரிவாக எடுத்துச் செல்வது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் மக்கள் தொடர்பு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.



